புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்புக்குரியது.உச்சநீதிமன்றத்திற்கு இருக்கின்ற புரிதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசுக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது.மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. கடந்த 49 நாட்களாக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராடியதற்கு உச்சநீதிமன்றம் இன்றைய தினம் அளித்துள்ள தீர்ப்பு விவசாயிகளின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகத் தான் பார்க்க முடியும். உச்சநீதிமன்றம்…
வணக்கம், உங்களால் நான் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினராக கடந்த ஆண்டு பதவியேற்று இன்னை என் வாழ்வின் மறக்க முடியாத நாளாக்கிய தொகுதி மக்களுக்கு இந்த பொன்னான வாய்ப்பினை வழங்கிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் E.R.ஈஸ்வரன் அவர்களுக்கும்,வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை கொடுத்த திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்ற மசார்பற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் வெற்றிக்காக அல்லும் பகலும் உழைத்த அனைத்து கட்சி தொண்டர்களுக்கும்,…